News December 6, 2024
தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச.7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை டிசம்பர் 12ஆம் தேதி அடையும் என கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
வெடி பொருள் உற்பத்தி சேமிப்பு கிடங்கினை சார் ஆட்சியர் ஆய்வு

கபிஸ்தலம் அருகே மருத்துவக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயராகவனுக்கு சொந்தமான வெடிபொருள் உற்பத்தி & சேமிப்பு கிடங்கினை கும்பகோணம் சார் ஆட்சியர் கிருத்யா விஜயன் நேரில் பார்வையிட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு, கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 13, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
தஞ்சை: ஆயில் நிறுவனத்தில் வேலை!

தஞ்சை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <