News March 29, 2025
தஞ்சையில் உயர் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

தஞ்சை பெரியார் பல்கலைக்கழக வள்ளுவர் கூட்டரங்கில் இன்று (மா.29) காலை 10 மணிக்கு கல்லூரி கனவு முகாம் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தன்னார்வ இயக்கம் மற்றும் டான் போஸ்கோ குழுவும் இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
தஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அம்மிநிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தாமரன்கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


