News April 4, 2025
தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <
Similar News
News November 26, 2025
JUST IN தஞ்சை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
தஞ்சாவூர்: இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவையாறு பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் செல்லையா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News November 26, 2025
தஞ்சை: உதவி கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், குப்பை தரம் பிரிப்பதில் 9.57 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தன. அதை தொடர்ந்து மாநகராட்சி முன்னாள் ஆணையரும் – தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனருமான சரவணக்குமார், ஒய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


