News January 23, 2025
தஞ்சையில் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக புதுச்சேரி யூனியன் பிரேதச சாராய மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1510 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. கலியபெருமாள் மற்றும் சுமதியை 20ம் தேதி கைது செய்த நிலையில் இன்று (ஜன.23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
தஞ்சை: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

திருவையாறு அருகே அரசகுடியை சேர்ந்த ரெங்கராஜ் (85) வயது முதிர்வால் காலமானார். இந்நிலையில், அவரது மனைவி மரகதம் (75), கணவர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் பிரிந்தது கிராம மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
News December 20, 2025
தஞ்சை: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்!

தஞ்சை மாவட்ட பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <
News December 20, 2025
தஞ்சை: கல்லூரி பேருந்து மோதி உயிரிழப்பு

செங்கிப்பட்டி அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கல்லூரி பேருந்து சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


