News April 7, 2025

தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

தஞ்சை: சிறுவனுக்கு அருவாள் வெட்டு!

image

பட்டுக்கோட்டை மணியார் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவன் சுரேஷ், முன்பகை காரணமாக சுரேசை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது முன்னாள் மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த சுரேஷ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து தஞ்சை சீர்திருத்த பள்ளியில் அடைந்தனர்.

News December 19, 2025

தஞ்சை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 19, 2025

தஞ்சை அருகே தீக்குளித்து தற்கொலை

image

பூதலூர் பெரியார்புரம் சேவையன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் (34), நண்பருடன் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!