News April 7, 2025
தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.
News December 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒக்கநாடு கீழையூர், வீரராசம்பேட்டை மற்றும் முள்ளுக்குடி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை (டிச. 5) மாரியம்மன் கோயில், திருப்பிறம்பியம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பனி காரணமாக காலை காலை 9 – 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது
News December 5, 2025
தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டு 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கரில் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 3 லட்சத்து 26 ஆயிரத்து 95 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


