News April 7, 2025
தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
பெண் குழந்தைகளுக்கு விருது – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய பெண் குழந்தைகளை தினத்தை முன்னிட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் 2026-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் விருதை பெறுவதற்கு தகுதியுள்ள குழந்தைகள் http://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தஞ்சை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
தஞ்சாவூர்: மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

கபிஸ்தலத்தில் அரசுப் பள்ளியின் ஆசிரியரான முருகன் என்பவர் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ஆசிரியர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


