News May 10, 2024
தஞ்சாவூர்: 407 பள்ளிகளில் 129 பள்ளி 100% தேர்ச்சி!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.
Similar News
News September 14, 2025
கும்பகோணம்: அதிமுக கிளைக் அவைத்தலைவர் படுகொலை

கும்பகோணம் அருகே மாத்தூர் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் மற்றும் வட்டி தொழில், ரியல் எஸ்டேட் செய்யும் மாத்தூரில் அதிமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் (70) நேற்று இரவு அவரது இல்லத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாச்சியார்கோயில் போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பினர்.
News September 14, 2025
நாட்டு வெடி விற்பனை செய்த குற்றவாளி கைது

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், அம்மன் நகரில் தீபாவளியை முன்னிட்டு எவ்வித முன் அனுமதியும் இன்றி நாட்டு வெடிகளை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதன்படி பாபநாசம் டிஎஸ்பி முருகவேல், மேற்பார்வையில் கபிஸ்தலம் காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான உமையாள்புரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 41 மூட்டை வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது
News September 14, 2025
தஞ்சை: இளைஞர்களே இந்த வாய்ப்பு உங்களுக்கு

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 3,665 காலிப்பணியிடங்களுக்கான காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது . இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 முதல் 4:30 மணி வரை நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!