News May 10, 2024

தஞ்சாவூர்: 407 பள்ளிகளில் 129 பள்ளி 100% தேர்ச்சி!

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.

Similar News

News October 14, 2025

தஞ்சை: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

தஞ்சை அருகே பாலியல் தொழில்; இருவர் கைது

image

நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் என்.என்.பேலஸ் என்ற விடுதில் நேற்று விபாசார தொழில் நடப்பதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சோதனை செய்ததில் விடுதியின் உள்ளே ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி விபசார தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் மற்றும் மேலாளரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

News October 14, 2025

தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்!

image

தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ்(45), என்ற மீனவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்து உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!