News March 25, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் 

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News November 16, 2025

தஞ்சை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

News November 16, 2025

தஞ்சை அருகே விபசாரம்: 3 பேர் கைது

image

ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு ஆண், பெண் மற்றும் புரோக்கராக செயல்பட்ட வீட்டின் பெண் உரிமையாளர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 16, 2025

தஞ்சை: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த டூவீலர் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய லால்குடியை சேர்ந்த ரெனால்டு என்பவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!