News March 28, 2024

தஞ்சாவூர் அருகே மோதல்: 4 பேர் கைது

image

பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 5, 2025

தஞ்சாவூர்: கூட்டுறவுத் துறை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர், பணி விவரங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களைத் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 5, 2025

தஞ்சை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

image

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!