News May 7, 2025
தஞ்சாவூர்: அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செயவும்.
Similar News
News December 2, 2025
தஞ்சை: இன்று ரயில் நிலையத்தின் 164ஆவது ஆண்டு!

தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஆண்டு ஜூலை1ம் தேதி ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு தொடங்கியது.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் நாகை தஞ்சாவூர் இடையே அகல ரயில் பாதை இந்தியாவின் கிரேட் தென்னிந்திய ரயில்வே என்ற பெயரில் 1861 டிசம்பர் 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றுடன் தஞ்சை ரயில் நிலையம் 164 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
News December 2, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
தஞ்சை: இடிந்தது விழுந்த பள்ளியின் சுவர்!

தஞ்சையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடு கட்டிடம் உள்ளிட்டவை இடிபாடுகளில் சிக்கி உள்ளன. இந்நிலையில் நேற்று (டிச. 01) தஞ்சாவூர் பிளாக் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்களும், சாலையில் நடந்து செல்வோரும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதனை சரி செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.


