News August 26, 2024
தஞ்சாவூரில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ஆா்.பொன்முடி நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 9 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து இரவு பகலாக இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். SHAREIT
Similar News
News October 25, 2025
தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 25, 2025
தஞ்சை: மர்மமான முறையில் மாணவர் இறப்பு!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (20). என்ஜினீயரிங் மாணவரான இவர், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
News October 25, 2025
தஞ்சையில் போலீசார் மீது தாக்குதல் முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் கேட்டு பணியிலிருந்த செவிலியரிடம், செல்வகுமார் (34) என்பவர் தகராறு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை செய்ய வந்த போலீஸ் ஏட்டு ஆனந்தனையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.


