News August 26, 2024
தஞ்சாவூரில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ஆா்.பொன்முடி நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 9 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து இரவு பகலாக இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். SHAREIT
Similar News
News December 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு

தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டிற்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்க 544 பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 407 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 137 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா கூறியுள்ளார்.
News December 6, 2025
தஞ்சை: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்

சேவப்பநாயக்கள்வாரியை சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவர் நேற்று மாலை தஞ்சை சீனிவாசபுரம் அருகே சீதாநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தற்கொலையா? அல்லது அடிபட்டு இறந்தாரா ? என்று விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று (டிச.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


