News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 16, 2025
திருவள்ளூரில் ரூ.98 கோடி வீண்!

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 – 25 ஆண்டுகளுக்குள் அரசு நிதியில் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்த கட்டடங்களை மக்கள் பயன்படுத்தாததால், அரசு நிதி, 98 கோடி ரூபாய்க்கும் மேல் வீணாகியுள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கிராம சேவை மையம், மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை என, கடந்த 10 – 25 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
News September 16, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.16) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News September 15, 2025
திருவள்ளூர்: மூதாட்டியை தாக்கி கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில், கடந்த செப்.11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்து சென்றதாக சுப்ரியா என்ற 20 வயது பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூதாட்டியை தாக்கி, 2 பீரோக்களில் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக மூதாட்டி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை