News March 30, 2024

தங்க தேரில் பவனி வந்த காமாட்சி அம்மன்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Similar News

News November 21, 2025

நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

image

தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ பயனாளிகளுக்காக நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தாலுக்கா வாரியாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த ஆர்ப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 21, 2025

காஞ்சிபுரம்: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

காஞ்சி: 7 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!

image

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேரந்தவர் ராணி (70) கடந்த 12ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த சுங்குவார்சத்திரம் போலீசார், பாப்பாங்குலி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 7 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ய 4 மாதங்களாக திட்டமிட்டுள்ளார் என தெரியவந்தது.

error: Content is protected !!