News March 23, 2025

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்- இளைஞர் தற்கொலை!

image

கீரம்பூரைச் சேர்ந்த மோகன்(33) தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த ஐந்து மாதங்களாக லதா என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த லதாவின் கணவர் மோகனை கண்டித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மோகன் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 18, 2025

திருச்சி: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

image

திருச்சி மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, 2415033
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
▶️விபத்து அவசர வாகன உதவி – 102, 108
▶️பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News April 18, 2025

திருச்சி: கார் மோதி விவசாயி பலி

image

வையம்பட்டியை அடுத்த சேசலூர் முத்தமடைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சடையன் (50). இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, சேசலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2025

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!