News March 21, 2025

தகவல் அளித்தால் ரூ.2,000 வெகுமதி

image

தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.

Similar News

News April 1, 2025

கோவை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க 94981-81212, 7708-100100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News March 31, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 31, 2025

மருதமலை சிறப்பு தெரியுமா?

image

கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

error: Content is protected !!