News June 27, 2024
தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீடு வழக்கு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் திருமலை முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில் ஏராளமான மனுக்கள் மீது விசாரணை நடந்தது.
Similar News
News October 18, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளுடன் அடையாள அட்டை தொலைபேசி குறியீட்டுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
தூத்துக்குடியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.