News March 4, 2025

டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

image

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

வேலூர்: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

வேலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி!

image

வேலூர்: தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு (65), கடந்த 25ம் தேதி, வீட்டின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென அவருடைய வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

image

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

error: Content is protected !!