News March 4, 2025

டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

image

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

வேலூர்: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

image

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

வேலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK <<>>HERE}
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

சபரிமலை சிறப்பு ரயில் காட்பாடி வழியாக இயக்கம்

image

சபரிமலை யாத்திரைக்காக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும். நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் ரயில் இயக்கப்படும். திரும்பும் ரயில் புதன்கிழமைகளில் இயங்கும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!