News March 4, 2025
டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
வேலூர்: இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில்!

வேலூர்: காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (நவ.23) மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகரன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
News November 24, 2025
வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (நவ-23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 24, 2025
வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (நவ-23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


