News March 27, 2025
டெபாசிட் வட்டியை குறைக்கும் வங்கிகள்

ஏப்ரல் மாதம் முதல் டெபாசிட் பணத்துக்கான வட்டியை குறைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை குறைத்தது. இதனையடுத்து, லோன்களுக்கான வட்டியை குறைத்த வங்கிகள் டெபாசிட் வட்டியில் மாற்றமில்லாமல் வைத்திருந்தன. இதனால், வங்கிகளின் லாபம் குறைவதால், அடுத்த மாதம் முதல் டெபாசிட் வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால், மக்களின் FDக்கான வட்டி குறையும்.
Similar News
News November 16, 2025
202 தொகுதிகளில் வெற்றி… ஆசை: நயினார் நாகேந்திரன்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றிபெறும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது அதிகப்படியான ஆசை என்றும் கூட சொல்லலாம் எனக்கூறிய அவர், அதிமுக கூட்டணியில் உள்ளதால் பெரும்பான்மை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
News November 16, 2025
2 ஆண்டுகளில் 12 நாடுகளில் Gen Z போராட்டம்!

1997-2012-க்கு இடையில் பிறந்த தலைமுறையே Gen Z. கடந்த 2 ஆண்டுகளில் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா, பெரு, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, பராகுவே, மாலத்தீவு, மெக்சிகோ என 12 நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்களில் சில ஆட்சியையே கவிழ்த்துள்ளன. ஊழல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக போராடும் இவர்கள், உலகளவில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தியாக வளர்ந்து வருகின்றனர்.
News November 16, 2025
நகை கடன்.. வந்தது முக்கிய அறிவிப்பு

அடகு கடை வணிகர்கள், தனியார் நிதிநிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு அதிக வட்டி(30% வரை) பெற்றுக் கொண்டு, அதே நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு(8-17%) கடன் பெற்று பயனடைந்து வந்தனர். மறு அடகு என அழைக்கப்படும் இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. நகைகளின் உண்மையான உரிமையாளர்களை அறிந்து நகை கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வங்கியை நாடுவதே சிறந்தது.


