News April 3, 2025
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News July 5, 2025
குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
அஜித் மீது நிகிதா அளித்த புகாரின் FIR ரிலீஸ்

அஜித் மீது நிகிதா ஜூன்.27ஆம் தேதி அளித்த புகாரின் FIR தற்போது வெளியாகியுள்ளது. அதில், தன்னுடைய ஒன்பதரை சவரன் நகைகளை காணவில்லை என்றும்,அஜித் வற்புறுத்தி சாவியை கேட்டதாகவும் FIR-ல் பதிவாகியுள்ளது. ஆனால், நிகிதா முன்னதாக தனது தாயாருக்கு வீல் சேர் கேட்டதற்கு ரூ.500 அஜித் கேட்டதாக தெரிவித்திருந்தார். நிகிதாவின் புகாருக்கும், அவரின் விளக்கத்திற்கும் பல்வேறு முரண் இருப்பது இந்த FIR மூலம் தெரியவந்துள்ளது.
News July 5, 2025
சிவகங்கை: தொழில்நெறி விழிப்புணர்வு வாரம்

தமிழக அரசின் ஆணைப்படி, ஜூலை 9 முதல் 15ஆம் தேதி வரை சிவகங்கை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் வளர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மகளிர், மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.