News April 3, 2025
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 25, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
மானாமதுரை: 16 வயது சிறுமி கர்ப்பம்..இளைஞர் மீது போக்சோ

மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்ற இளைஞர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்நிலையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அச்சிறுமி மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 25, 2025
மானாமதுரை: 16 வயது சிறுமி கர்ப்பம்..இளைஞர் மீது போக்சோ

மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்ற இளைஞர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்நிலையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அச்சிறுமி மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


