News April 3, 2025

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

image

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News September 18, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News September 17, 2025

சிவகங்கை: அரசு ITI ல் சேர அவகாசம் நீட்டிப்பு..!

image

சிவகங்கை ஐடிஐயில், காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 30.9.2025 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750/- இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள் காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE IT

News September 17, 2025

சிவகங்கை: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!