News April 3, 2025
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 24, 2025
சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் அக்.27 மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் அக்.30 தேவர் குருபூஜை விழாவை ஒட்டி சிவகங்கை, காளையார் கோயில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இந்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக மற்றொரு நாள், வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
News October 24, 2025
மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

அக்25) சனிக்கிழமை அன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளாம். அனுமதி இவவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். https://forms.gel/8AKg3uhmWued2mQX6.
News October 23, 2025
சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <


