News April 3, 2025
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 24, 2025
சிவகங்கை: 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். தற்போது மாநகாராட்சியில் புகார் அளித்துள்ளனர்
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News November 24, 2025
JUST IN சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார் என சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
காரைக்குடி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

காரைக்குடி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்ற 10 இரயில் நிலயங்களில் ஒன்றானது காரைக்குடி ரயில் நிலையம். இதில் நடைமேடைகள், மின்விளக்குகள் அமைப்பது, பயணிகள் உள்ளிட்ட பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


