News April 3, 2025

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

image

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 18, 2025

காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

image

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 18, 2025

சிவகங்கை: தந்தை மூளைச்சாவு.. குடும்பத்தார் நெகிழ்ச்சி செயல்

image

சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த கட்டட பொறியாளர் எஸ்.குமரப்பன் (55) மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிச.16ல் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் குமரப்பனின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டது.

News December 18, 2025

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்னான +91-9013151515-ஐ SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!