News April 3, 2025

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

image

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 22, 2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணியாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட அனைத்து சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்பொற்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 22, 2025

சிவகங்கை: முனைவோர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மேலாளர், 04575-240257 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

சிவகங்கையில் கனமழை தொடரும்.!

image

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!