News April 12, 2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.
Similar News
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.2025) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


