News April 12, 2025

டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

image

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.

Similar News

News November 15, 2025

இராமநாதபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகே குடும்பத்துடன் வசித்து வந்த சஞ்சய் பாபு என்ற இளைஞர் நேற்று (நவ. 14) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்தவர். இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 15, 2025

ராம்நாடு: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில்…

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது 75 சதவிகிதம் கட்டுமான பணிகள் முடிவு அடைந்து விட்டது என தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் கூறினார்.

error: Content is protected !!