News February 16, 2025

டூவிலர் மீது கார் மோதி இளைஞரின் கால் எலும்பு முறிவு

image

வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 19 ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆத்துமேடு நால்ரோட்டில் வந்த பொழுது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பிரேம்குமாரின் வலது கால் எலும்பு உடைந்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வேடசந்தூர் போலீசார் விசாரணை.

Similar News

News December 17, 2025

திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வத்தலகுண்டு, பழைய வத்தலக்குண்டு, சாமியார் மூப்பனூர், ஆடுசாப்பட்டி, கணவாய்பட்டி, ஜி.தும்மலபட்டி, ஊத்தங்கல், புதுப்படி, கன்னிமார் கோயில்பட்டி, கொங்குவார்பட்டி, தோணிமலை, கன்னிவாடி, குய்யவநாயக்கன்பட்டி, தருமத்துப்பட்டி, கோம்பை, மல்லையாபுரம், சுரக்காபட்டி, திப்பம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 17, 2025

பழனி போலீஸ் பெயரில் போலி வேட்டை? SP கடும் எச்சரிக்கை!

image

பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் விடுத்துள்ள அறிவிப்பில், பழனி அடிவாரத்தில் புதிதாக கடை அமைக்க வியாபாரிகளிடம் காவல்துறை கண்காணிப்பாளர் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பதாக தகவல் வருகிறது. புதிய கடை அமைக்க தேவஸ்தானம் நகராட்சியிடம் தான் அனுமதி பெற வேண்டும். இதுபோன்று மோசடி செய்தால் 98847-41609 என்ற காவல்துறை எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணூங்க!

News December 17, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல்:-தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை 18/12/2025 வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்னனி வங்கிகள் கலந்து கொண்டு, மகளிர் தொழில் முனைவோருக்கு உடனுக்குடன் வங்கி கடனுக்கான ஒப்புதல் வழங்கபடும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அருமையான தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!