News April 8, 2025
டூவிலரில் சேலை சிக்கியத்தில் பெண் உயிரிழப்பு

சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் நேற்று காலை அவரது உறவினரின் மகன் மணிகண்டன் என்பவருடன் எப்போதும்வென்றானில் உள்ள கோவிலுக்கு டூவிலரில் சென்றுள்ளார். நாலாட்டின்புதூர் அருகே சென்ற போது காற்றில் பறந்த ஜோதிமணியின் சேலை திடீரென இருசக்கர வானகத்தின் சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி உயிரிழந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News December 1, 2025
தூத்துக்குடி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
கோவில்பட்டியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (65), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குளிர் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக நவம்பர் 27 முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை இல்லாத ஞாயிற்றுக்கிழமை இரவில், வெப்பநிலை சுமார் 22 டிகிரிக்கு குறைந்ததால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடல் அமைதியாகக் காணப்பட்டது.


