News April 3, 2025
டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவர் பலி

நெல்லை பத்தமடை தைத்கால் தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(17) ஆரக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பத்தமடையில் இருந்து சேரன்மகாதேவிக்கு அவர் பைக்கில் சென்ற போது டிராக்டர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
கோடை வெயில் கலெக்டர் முக்கிய அறிவுரை

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று (ஏப்ரல்15) விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: அடுத்து வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் விவரம் மாவட்ட காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கைபேசி எண் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News April 15, 2025
விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

நெல்லை பயணிகள் கவனிக்க; கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே குறிப்பில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையும், திருவனந்தபுரம் – தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.