News April 10, 2025
டாஸ்மாக் கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 15, 2025
காஞ்சி: நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிய மாணவர்கள்!

காஞ்சி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூசாமி MTC நடத்துநர். இவர், அகரம் -தாம்பரம் பேருந்தில், நடத்துநராக உள்ளார். ஆதிநகர் அருகே வந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர், பேருந்து படிக்கட்டு & ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், பூசாமி மாணவர்களிடம் பேச, அவர்கள் இவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
காஞ்சி: கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை சிவகாஞ்சி போலீசார் நேற்று (நவ.14) கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 4.500 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News November 15, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


