News April 10, 2025

டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 21, 2025

காஞ்சிபுரம்: பட்டு சேலைகளின் விலை உயர்வு!

image

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.50,000 வரை உயர்ந்து, ரூ.1.35 லட்சமாகியுள்ளது. இதனால் சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.10,000-15,000லிருந்து ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.இதனால் சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக பட்டு சேலை இருக்கிறது. இப்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழிலுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது

News October 21, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் இன்று அக். 20 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!