News April 9, 2025
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல். 1 மற்றும் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும், அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை மூடப்பட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளின் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பெறப்படும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை, பிற நபர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 16, 2025
திருப்பூரில் வட மாநில வாலிபர்கள் கைது

திருப்பூர் வடக்கு காவல்நிலையை எல்லைக்கட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரோஸ், சுசில் குமார் முக்கியா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சீட்டு கட்டு மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
News September 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 15.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.