News June 26, 2024

டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

image

நீலகிரி மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

Similar News

News November 12, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு உதகை கேர்ன்ஹில் வன அலுவலகம், பொருள்விளக்க மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி குறைகளை நேரில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News November 12, 2025

கூடலூர் ஜீன்பூல் மலையேற்றம்: க்யூ ஆர் கோட் வெளியீடு

image

தமிழ்நாட்டில் மலையேற்றம் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக அரசு சார்பில் ‘டிரக் தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 இடங்களில் மலையேற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து இரு வழி பயணமாக எட்டு கிலோமீட்டர் பயண வழிகாண க்யூ ஆர் கோட் வெளியிடப்பட்டுள்ளது.

News November 11, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

error: Content is protected !!