News January 23, 2025
டங்ஸ்டன் ரத்து – அரிட்டாபட்டி மக்கள் கொண்டாட்டம்

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்

மதுரை திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் டிச. 8 முதல் 10 நாட்களுக்கு துரித உணவு தயாரித்தல், இயற்கை உணவு, சிறுதானிய உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கும் முகாமில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். டிச. 7க்குள் 94436 00561 ல் முன்பதிவு செய்யலாம்.


