News April 6, 2024
ஜோலார்பேட்டை அருகே இளம் பெண் மீட்பு

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்த திவ்யா இவர் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலிசார் விசாரணை செய்த நிலையில் இன்று தி.மலை மாவட்டத்தில் இருந்த இளம் பெண் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 19, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 19, 2025
ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு
News April 19, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் குரூப் 4 மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்வானது வருகின்ற 22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.