News August 14, 2024

ஜெ. சுத்தமல்லி அரசு மேல்நிலை தலைமை ஆசிரியருக்கு 1 லட்சம்

image

அரியலூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தெரிவு செய்து காமராசர் விருது மற்றும் 1லட்சம் பரிசை அரியலூர் மாவட்டம் ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 1லட்ச ரூபாய்க்கான விருதை வழங்கி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Similar News

News November 23, 2025

அரியலூர் இரண்டு நாட்கள் வாக்காளர் உதவி மையம்

image

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

அரியலூர்: 200 பேரை பலி கொண்ட தினம் இன்று!

image

கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரெயில் ஒன்று அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தை கடந்த போது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நடந்து 69 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, அரியலூர் மக்களின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துள்ளது.

News November 23, 2025

அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!