News April 30, 2025

ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

image

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

Similar News

News November 19, 2025

நெல்லை: இனி சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.10000 அபராதம்!

image

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று கூறினார். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை இனி வரும் காலங்களில் கைப்பற்றும் பட்சத்தில், மாடுகளுக்கு முதல் முறை ரூ.5000, இரண்டாவது முறை ரூ.10000 வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

News November 19, 2025

நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நவ.21 அன்று காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

image

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!