News April 30, 2025

ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

image

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

Similar News

News November 23, 2025

நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News November 23, 2025

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

நெல்லை: 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்

image

மானூர் அலவந்தான் குளம் பகுதியை சேர்ந்த அருள் சேவியர் அங்குள்ள 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அருள் சேவியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!