News April 30, 2025
ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.
Similar News
News December 14, 2025
நெல்லையில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

நெல்லை மக்களே, ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
நெல்லை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

நெல்லை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News December 14, 2025
நெல்லை பெண்ணிடம் ரூ.6.89 லட்சம் நூதன மோசடி

தாழையூத்தை சேர்ந்த தீபா என்பவர் (45), பகுதிநேர வேலை என்ற பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் ஹோட்டல் ரிவ்யூ மோசடியில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறிய தொகை தந்து நம்பிக்கை ஏற்படுத்திய மர்மகும்பல், பின் ரூ.6.89 லட்சம் பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு அனுப்ப வைத்து, திரும்பப் பெற முயலும்போது மேலும் பணம் கேட்டனர். மோசடியை உணர்ந்த தீபா புகாரளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


