News August 4, 2024
ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, புதுக்கோட்டையில் உள்ள 4,90,069 அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News October 19, 2025
புதுகையில் சட்டவிரோத மது விற்பனை

புதுக்கோட்டையில் பல பகுதிகளில் நேற்று (அக்.19) புதுக்கோட்டை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுகை அடுத்த சோலகம் பட்டியில் மாரியாயி (50), முத்துலட்சுமி (35) நாயக்கம்பட்டியில் சக்திவேல் (50), ரவி (60) தச்சங்குறிச்சியில் அண்ணாமலை (65) என்பவரும் சட்டவிரோத மது விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News October 19, 2025
புதுகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

புதுகை மாவட்டத்தில் 83 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.