News April 16, 2025

ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

கோவை மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

Similar News

News September 18, 2025

கோவை அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை உக்கடத்திலிருந்து, பொள்ளாச்சி, பழனி வழியாக, மதுரை செல்லும் அரசு பேருந்து, இன்று அதிகாலை சென்றுள்ளது. பொள்ளாச்சி சாலையில் ஆச்சிபட்டி அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற டேங்கர் லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் நடத்துநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 30 பயணிகள் படுகாயமடைந்து பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News September 18, 2025

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

கோவையில் கொடூரக் கொலை: அதிரடி கைது!

image

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, யாசகர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் சீனிவாசன் என்பதும், மற்றொரு யாசகர் வேல்முருகன், அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த வேல்முருகனை, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!