News April 22, 2025
ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
News November 17, 2025
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
News November 17, 2025
புதுச்சேரி: குடும்பதலைவிக்கு ரூ.1000 விரைவில்

இன்று புதுவை சட்ட சபையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இலவச கோதுமை ஓரிரு வாரத்தில் கொடுக்கப்படும், மஞ்சள் அட்டை குடும்ப தலைவிக்கு வழங்கப்படுவதாக அறிவித்த ரூ.1000 விரைவில் வழங்கப்படும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும், அமைச்சர் ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்றார்.


