News April 22, 2025
ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
புதுவை: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்தியால் வெட்டு

புதுவை வில்லியனுார் ராமநாதபுரம், புது தெரு விஜயசங்கர், நேற்று முன்தினம் அங்குள்ள பாலம் வழியாக பைக்கில் சென்றார். அதே பகுதி செந்தில் என்பவர் மாடுகளை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது மாடு இடித்து விஜயசங்கர் கீழே விழுந்தார். தட்டிக்கேட்ட விஜயசங்கரை செந்தில், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 28, 2025
காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


