News April 13, 2024
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அடுத்து மணல்மேடு டெக்ஸ் பார்க் அருகே KTPL பெண்கள் விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரைப்பெர்ரி தர்சுலி (26) தங்கி வேலை பார்த்தார். இவர் காய்ச்சல் சளி காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
தோகைமலை அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் சுப்பன் மனைவி மாணிக்கம்மாள்(வயது 50). இவர் கொத்தமல்லி மேடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் சோதனை செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய 5 பேர்: அதிரடி கைது

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


