News August 17, 2024
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக நாள்தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றோம் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக. ஓட்டு போட உரிமை உள்ள அனைவரும் முதல்வராக உரிமை உள்ளது. மக்கள் தான் எஜமானர்கள். அதனால், ஜாதி மதத்திற்கு இங்கு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான அறிவிப்பானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 22.09.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
News September 17, 2025
காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வது கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அறிவிக்கபட்டுள்ளது. நாளை (18.09.2025) மாங்காடு நகராட்சி, ரகுமான் மண்டபம், பட்டூர், மாங்காடு, குன்றத்தூர் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடம், குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து, இரண்டாம் கட்டளை ஊராட்சி, ரெட்டியார் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள திறந்தவெளி மைதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.