News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 20, 2025

ராணிப்பேட்டை: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? பதட்டம் வேண்டாம்,<> இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

ராணிப்பேட்டை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற 5,656 மாணவர்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.56.56 லட்சம் மதிப்பீட்டில் இதுவரை 5,656 மாணவர்கள் பயன் பெற்று வருவதாக இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!