News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 27, 2025
வேலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

வேலூர், இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு!

வேலூர், குடியாத்தம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
வேலூரில் இருந்து 100 போலீசார் பயணம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100 போலீசார் நேற்று (நவ.26) திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். தீபத்திருவிழா முடிந்த பின்னர் 4-ந்தேதி அவர்கள் வேலூருக்கு திரும்பி வர உள்ளனர் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


