News April 2, 2025
ஜவுளி பூங்கா அமைக்க ரூ. 2.50 கோடி நிதியுதவி: கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 09.04.2025 அன்று 04.00 மணிக்கு நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES TEAM MANAGER பணிக்கு 25காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
தி.மலை: சொட்டுநீர் பாசனம் 100% மானியம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பதற்கு 100% மானியம் வழங்கப்படுமென திருவண்ணாமலை வட்டாரத் தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார் மற்றும் நில ஆவணங்களுடன் செங்கம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவில் தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு செய்யலாம். இத்தகவலை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தி.மலை: உங்க போனுக்கு தேவை இல்லாத மெசேஜ் வருதா?

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தங்களிடமிருந்து பணம் பறிக்கும் புதிய மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவையில்லாத குறுஞ்செய்தி உங்கள் போனுக்கு வருகிறதா? உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930க்கு அழைக்கவும். அல்லது <