News April 2, 2025
ஜவுளி பூங்கா அமைக்க ரூ. 2.50 கோடி நிதியுதவி: கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 09.04.2025 அன்று 04.00 மணிக்கு நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
தி.மலை: மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி!

ஆரணி கே.கே. நகரைச் சேர்ந்த 55 வயதான தாமோதரன் என்பவர், தனது வீட்டின் 2வது மாடியில் கட்டுமானப் பணியின்போது, போதிய பொறியாளர் மற்றும் மேஸ்திரி இன்றி தானே மர வேலைகளைச் செய்து வந்துள்ளார். பணியின்போது தவறி கீழே விழுந்த அவரை, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News December 15, 2025
தி.மலை: கார் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

சென்னையைச் சேர்ந்த சரத்குமார் ஓட்டிவந்த கார், வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் கடைசிகுளம் அருகே நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி, பின்னர் சாலையோரம் சென்ற மகாலட்சுமி என்ற பெண் மீது மோதியது. படுகாயமடைந்த அப்பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 14, 2025
உதயநிதியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

தி.மலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.“கொள்கை எதிரிகள் உதயநிதியை ‘Most Dangerous’ என கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்” என பேசினார். 2026 தேர்தல் இலக்கை நோக்கி இளைஞர்கள் களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.


