News August 9, 2024
ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசின் மூலம் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 14ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
சிவகாசி: பல்கலை சான்றிதழை அச்சடித்த மூவர் கைது

சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் போலியாக அச்சடிக்கப்படுவதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த புகாரின் பேரில் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் கேரளா மாநிலம் மலபுரம் போலீசார் திடீர் சோதனை நடத்தி போலி சான்றிதழ் அச்சடிப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அச்சகத்தில் பணியாற்றி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <
News December 6, 2025
விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மோசடி

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி, பெருமாளம்மாள், ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சூரியகலா ஆகியோர் போலி நகையை அடகு வைத்து ரூ.15.94 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


