News March 5, 2025

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு அவசியம்-ஆட்சியர்

image

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மார்ச்.08 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அவசியம் எனவும், தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 20, 2025

தஞ்சை: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT

News October 20, 2025

தஞ்சை: மழையால் ஒரே நாளில் 7 வீடுகள் இடிந்து சேதம்

image

பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்த நிலையில் திடீரென கன மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

News October 20, 2025

தஞ்சை: மதுபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை!

image

துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39). நேற்று முன்தினம் இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு துவரங்குறிச்சி செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பள்ளத்தூரை சேர்ந்த செந்தில்(41) என்பவர், பாண்டியராஜனிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!