News March 5, 2025
ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு அவசியம்-ஆட்சியர்

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மார்ச்.08 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அவசியம் எனவும், தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
JUST IN தஞ்சை: 2 பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தில் இன்று காலை மயிலாடுதுறை சாலையில் சென்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியது. அப்பகுதியில் இதுபோல தொடர் விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 12, 2025
தஞ்சை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தஞ்சை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
தஞ்சை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<


