News March 5, 2025
ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு அவசியம்-ஆட்சியர்

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மார்ச்.08 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அவசியம் எனவும், தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 12, 2025
அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணி மேற்கொள்வது தொடர்பாக இன்று (நவ.11) மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இஆப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் நாகவேலு, சாஸ்திரா பல்கலைகழக நிதி அலுவலர் கல்யாண சுந்தரம், நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு மற்றும் பலர் உள்ளனர்.
News November 11, 2025
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (நவ.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எம்.பூவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.


