News January 23, 2025
ஜன 29 முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கான குறைதீர்க்க கூட்டம் வருகின்ற 29ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டங்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரிந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு முக்கிய முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கியுள்ளது. மழை நேரங்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் பகுதிகள் மற்றும் பெரிய மரங்களின் கீழ் தங்குவது ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டது. மின்சாரம் கசிவு, மரம் சரிவு போன்ற அபாயங்கள் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 24, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கிய ஆட்சியர்!

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மொத்தம் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான நவீன இரு சக்கர நாற்காலி வாகனங்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News November 24, 2025
ஏற்காடு ட்ரக்கிங் செல்வோர் கவனத்திற்கு!

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி–குண்டூர், கொண்டப்பநாயக்கன்பட்டி–குண்டூர் டிரெக்கிங் ரூட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான ஏற்பாடுகள் முடிந்தவுடன் புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.


