News January 22, 2025
ஜனவரி.26 கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News October 19, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 19, 2025
சேலம்: மின் பிரச்சனையா இங்கு போங்க!…

சேலம் மாநகர் மக்களே மின் தொடர்பான பிரச்சனையா, கரண்ட் பில் அதிகமாக வருகிறதா? புதிய இணைப்பு பெறுவதில் ஏதேனும் சிக்கலா? மின் தொடர்பான வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அக்.22ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
News October 19, 2025
சேலம் கோட்டத்தில் 35 லட்சம் பேர் பயணம்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “கடந்த 16ம் தேதி முதல் நேற்று 18ம் தேதி வரை 35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று (19ம் தேதி) 16 லட் சம் பேர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி வருவாய் கிடைத்துள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.