News March 29, 2024
சோமாசிப்பாடியில் புனித வியாழன் நிகழ்வு

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News November 6, 2025
தி.மலை: பெண்களுக்கு முக்கியமான உதவி எண்

தி.மலை மாவட்ட பெண்களே.., பொது இடங்கள், அலுவலகம், வீட்டில் வன்முறையை சந்திக்கிறீர்களா..? குடும்பத்தால் அடக்குமுறையா..? நிதிப் பிரச்னையா..? ஆதரவின்றி தவிக்கிறீர்களா..? இனி எதற்கும் கவலை வேண்டாம். அரசின் 24 மணி நேர உதவி எண்ணான 181-ஐ அழைத்தால் பெண்களுக்கான திட்டங்கள், அரசின் சேவைகள், புகார், தீர்வு என அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
தி.மலை : இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்!

தி.மலை: சந்தவாசல் அருகே உள்ள கேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் மனைவி எழிலரசி(35). இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜா(39). இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த ராஜா எழிலரசியை ஆபாசமாக பேசித் திட்டினார். இதையடுத்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது ராஜா கைது செய்யப்பட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயையே கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


