News October 25, 2024
சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் சென்னை லஞ்ச ஒழிப்–புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர் தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


