News October 25, 2024
சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் சென்னை லஞ்ச ஒழிப்–புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.
Similar News
News December 16, 2025
திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பிற்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்

திருத்தணி அருகே கொண்டாபுரம் பள்ளியில், கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தது குறித்து எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
துப்புரவுத் தொழிலாளிக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

பேரம்பாக்கம் துப்புரவுத் தொழிலாளி பணியில் இருந்தபோது கடந்த சில நாட்களுக்கு முன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த அமைச்சர் நாசர் இன்று (டிச.16) நேரில் சென்று பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியைச் சந்தித்து ரூ.1லட்சம் நிவாரண நிதி வழங்கினார். உடன் ஆட்சியர் மு.பிரதாப் இருந்தார்.
News December 16, 2025
திருவள்ளூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <


