News April 2, 2025
சோடியம் நைட்ரேட் ஊசி செலுத்தி மாணவர் உயிரிழப்பு

கொடுங்கையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பால் யூட்டி கிளாஸ்(20), செல்போனுக்கு அடிமையான இவர் மன அழுத்தத்தில் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சோடியம் நைட்ரேட் ஊசியை தனக்கு தானே செலுத்தி மயக்கமடைந்துள்ளார். பதறிபோன பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்க வேண்டிய வயதில் இவ்வாறு நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 10, 2025
சென்னை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், 044-25228025 ▶️சென்னை மாநகராட்சி ஆணையாளர், 044-25381330 ▶️ சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், 044-23452345 ▶️ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 044-27662400 ▶️ மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், 044-24714758 ▶️ லஞ்ச ஒழிப்புத் துறை, 044-22310989. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
News April 10, 2025
மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க