News May 10, 2024

சொத்து தகராறு: தாயை தாக்கிய மகன் கைது

image

ஏரியூர், வெள்ளமன் காடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜீ, வளர்மதி(55). இவர்களுக்கு 3 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது இரண்டாவது மகன் ரத்தினவேல், வளர்மதி யிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து, வீட்டில் இருந்த மரப் பொருட்களுக்கு தீ வைத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் பெரும்பாலை போலீசார் நேற்று ரத்தினவேலை கைது செய்தனர்.

Similar News

News November 6, 2025

தருமபுரி: விவசாயிகளுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த தருமபுரி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (07.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 6, 2025

தருமபுரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள்<> இந்த லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

தருமபுரி: முதியவருக்கு பாய்ந்த போக்ஸோ!

image

பாப்பிரெட்டிபட்டியில் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா வசிக்கும் இடத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி தெருவில் நண்பர்களுடன் விளையாடியா 4வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின் சிறுமியின் வாக்குமூலம் உண்மை என தெரிந்து,புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!