News March 26, 2025
சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்
Similar News
News December 20, 2025
சிவகங்கை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

சிவகங்கை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,50,808 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <
News December 20, 2025
சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
News December 20, 2025
சிவகங்கை: சிறுவன் ஓட்டிய டூ – வீலரால் பறிபோன சிறுமி உயிர்

ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் தன்ஷிகா 5, பாண்டிமுத்து மகள் காயத்ரி 7. இருவரும், டிச., 16ல் ரோட்டில் நடந்து சென்ற போது, அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓட்டி வந்த டூ – வீலர் மோதியதில், சிறுமியர் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தன்ஷிகா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.இதை கண்டித்து, தன்ஷிகா உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.


