News February 19, 2026
சைபர் மோசடி: திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மொபைல் போன்களுக்கு வரும் போலி எஸ்எம்எஸ் & சந்தேகமான இணைய இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக தள்ளுபடி, பரிசு கூப்பன் போன்ற தகவல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண், www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
Similar News
News March 12, 2026
திண்டுக்கல்: இனி சிலிண்டர் புக் செய்வது ‘ரொம்ப ஈஸி

தமிழகத்தில் இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் சரியாகச் செயல்படாததால் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 7588888824 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும், 7718955555 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ் மூலமும் சிலிண்டர் பதிவு செய்யலாம். மேலும், ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்னை மிரட்டி கொள்ளை!

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே குயவநாயக்கன்பட்டியில், தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த முருகன் மனைவி செவந்தியம்மாளை (50) மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
நெய்க்காரப்பட்டி அருகே வீட்டில் தீ விபத்து

நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் வீடு முழுவதும் தீக்கிரையாகி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


