News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News November 25, 2025
கிருஷ்ணகிரி: லாரி மீது பஸ் மோதி 11 பேர் காயம்

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, குருபரப்பள்ளி அருகே பண்டாரப்பள்ளியில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சூளகிரி சுவேதா, கடத்தூர் விஜயா உட்பட 11பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
ஓசூரில் மாபெறும் கல்வி கடன் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கி நிர்வாகம் சார்பில் வருகின்ற நவ.26 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
கிருஷ்ணகிரி: தாய் சொன்ன வார்தையால் மனமுடைந்த சிறுமி தற்கொலை

காவேரிப்பட்டினம் அடுத்த ஜோதிபுரம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி திவ்யா. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திவ்யாவிடம் தாய் சுசிலா வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திவ்யா வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


