News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (37) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் நேற்று டிச.21 ல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
அரக்கோணம்: தெரு நாய்க்கடியால் இளைஞர் பரிதாப பலி!

அரக்கோணம், மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திவாகர் (19) இவர் +2 வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. முறையான சிகிச்சை பெறாமல் இருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 21) திடீரென காய்ச்சல் அதிகமானது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, ரேபிஸ் நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News December 22, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


